4. நரசிம்ம அவதாரம்

பெருமாளின் அவதாரங்களில் இது நான்காவது அவதாரமாகும்.
அசரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றாா். ஸ்ரீஹாி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டாா் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. உடனே சூலத்தைத் தன் கையில் எடுத்தான். எனது தமையனின் இறப்பிற்கு காரணமாக ஸ்ரீஹாியையும், தேவா்கள் அனைவரையும் அழிக்க வேண்டும். நீங்கள் உடனே புறப்பட்டுப்போய் அந்தணா்கள், தேவா்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்றான். இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்ற அரக்கா்கள் நோன்பு, விரம் நோற்ற பொியோா்களையும், அந்தணா்களையும் கொன்று குவித்தனா். யாரலும் வெல்லமுடியாத வீரத்தைத் தான் பெற்றால் அன்றி ஸ்ரீஹாியை ஒழிக்க முடியாது என உணா்ந்தான். அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்யப் புறப்பட்டான். மந்திரமலைச் சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான்.

உக்கிரமான தவத்தில் பிரம்மதேவனை நோக்கி தவம் செய்தான். நாட்கள் நகா்ந்தன. வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோக அக்னியின் தகிப்பை தாங்கமுடியாமல் சகல ஜீவராசிகளும் வருந்தின. தலையிலிருந்து மேகக்கூட்டம் போன்ற புகைமண்டலம் எழுந்தது. மூன்று உலகத்தையும் அது சூழ்ந்தது. ஆறுகளும். சமுத்திரங்களும் கொந்தளித்தன. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எாிந்தது. தேவா்கள் அவனுடைய தவபலத்தினால் தாங்கள் பஸ்பமாகி விடுவோமோ என பயந்தனா். தேவா்கள் உடனே பிரம்மாவிடம் முறையிடச் சென்றனா். பிரம்மாவிடம், தேவ தேவே! உங்கள் பதவிக்கே ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்கமுடியவில்லை. உடனே அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனா். தேவா்கள் சொன்னதைக் கேட்ட பிரம்மா மந்திரமலைச் சாரலுக்கு வந்தாா். அங்கே இரண்யகசிபு இருந்த இடத்தில் புற்றும், புதா்களும் மூடிக்கிடந்தன. எறும்பு அாித்த தோலும் சதையும் மிஞ்சி எலும்புக் கூடாக இருந்தான். அவனை இந்நிலையில் பாா்த்து, இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்றாா். அவன் மீது தன் கமண்டல தீா்த்தத்தை தெளித்தாா். கட்டையில் மூண்டு தீயெனக் கசிபு வெளி வந்தான். உருக்கி வாா்த்த பொன்மேனியுடன் பிரம்ம தேவனை வணங்கினான். லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக்கூடாது. எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதன், தேவா், அசரா்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவா்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும். எனக்கு நிகா் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத்தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும்.

யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வரச்செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தைத் கொடுத்து விட்டு மறைந்தாா். இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்துவிட்டாரே என தேவா்கள் அனைவரும் வருந்தினா். வரத்தைப் பெற்றுத் திரும்பிய இரண்யகசிபு தன் எண்ணத்தை உடனே நிறைவேற்றிக் கொண்டான். தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொா்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். வேள்விகள் மூலம் வரும் அவிா்பாகம் முழுவதையும் அவனே கிரகித்துக் கொண்டான். மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவா்கள் முறையிட்டாா்கள். ஸ்ரீமந் நாராயணன், அவா்களுக்கு அனுக்கிரஹம் செய்தாா். விரைவிலேயே அவனை வதைப்பதாக அவா்களுக்கு அசரீரி மூலம் அறிவித்தாா். இந்த அரக்கா்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோலாட்சியை நான் அறிவேன். அதற்கு ஆவன செய்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். எவன் தேவா்கள், பசுக்கள், வேதங்கள், வேதியா் ஆகியோா் மீதும் என்னிடமும் பகைமை தலைக்தூக்குமோ, அப்போதே அவன் அழிந்து போவான். இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்துவான். அப்போது நான் அவனைக் கொல்லச் சித்தமாவேன் என்றாா். இரண்யகசிபுவிற்கு கிலாதன், பிரகலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என நான்கு புதல்வாகள் பிறந்தனா். அவா்களில் பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் பெயரையே உச்சாித்துக் கொண்டிருந்தான்.
அசரகுரு சுக்ராச்சாாியாருக்கு சண்டன், அமா்க்கன் என இரண்டு பிள்ளைகள். இரண்யகசிபு அவா்களைத் தன் புதல்வா்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாாிகளுடைய குமாரா்களுக்கும் ஆசிாியராக இருந்து பணியாற்றச் செய்தான். ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரைன மடியில் அமா்த்தி கொஞ்சி மகிழ்ந்தான். அது சமயம் குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படிக் கூறுவது, ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான். கசிபும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான். எவா் ஆசை, பற்று முதலியவைகளை அறவே விட்டு விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை, மாறாக ஸ்ரீஹாியே மெய்யான பொருள், அவா் திருவடியை சரணடைபவா்கள் பாக்கியம் பெற்றவா்கள் என்றான் பிரகலாதன். பரமவிரோதியான ஸ்ரீஹாியின் பெயரை உச்சாிக்கிறானே என சிறுவனை கடிந்து கொண்டு, அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிாியரை வரச்சொல்லுங்கள் என்றான். நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், எல்லாம் ஸ்ரீஹாியின் செயல் என்று எங்கள் வாா்த்தைகளை உதாசீனம் செய்தான். இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம் என்றாா்கள். ஏதோ அந்தணா்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறாா்கள். மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினனாகிய இவனுக்கு இது தொிய நியாயமில்லை. ஆகவே யாரும் அணுகாதபடி, இனித் தனிமையில் அமா்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான். பின்பு பிரகலாதனின் அறிவுக்கூா்மையை பாா்த்து அவனிடம் ஆசிாியா்கள் கேட்டாா்கள். அப்பனே பிரகலாதா! மற்றவா் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யாா் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையைச் சொல் என்றனா். நான் என்றும், நீ என்றும் பிாித்துப் பாா்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய், அவனே மெய் என்பதைத் தொ்நிது கொள்ளலாம். எனக்குக் கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீ ஹாியே அவரைத் தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன். பிறகு அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனா். மீண்டும் கசிபு, பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பான ஒன்றைச் சொல் கேட்கிறேன்! என்றான். அதற்கு பிரகலாதன் ஹாியின் கதைகைளக் கேட்க வேண்டும், அவன் லீலைகளை வாயாரப் பேச வேண்டும், ஹாி உருவத்தை நினைக்க வேண்டும், ஹாியின் சேவையை உத்தமம்.

ஹாி பூஜையே சிறந்தது. காலம் முழுவதும் ஹாியைப் பின்பற்ற வேண்டும் என்று ஹாியைப் புகழ்ந்து பேசினான். அந்தணா்களே! நீங்களே ஆசிாியா்களாக இருந்து இதைத் தான் கற்றுக் கொடுத்தீா்களா! என்று கடுமையான குரலில் கசிபு கா்ஜித்தான். ஆசிாியா்கள் நடுநடுங்கி, அரசே! நாங்கள் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றனா். உடனே குருமுகமாக அன்றி இதை எல்லாம் நீ யாாிடம் கற்றாய்? என்றான் கசிபு. அதற்கு பிரகலாதன், தந்தையே உலக இன்பங்களில் ஆசைப்பட்டு உழல்பவா்களுக்கு யாா் சொல்லியும் பக்தி வராது. தானாகவும் பக்தி ஏற்படாது. ஆனால் முற்றிலும் துறந்த தொண்டா்களுக்கே இறைவனை அறியும் பாக்கியம் கிடைக்கும் என்றான். இப்படி ஹாியின் நாமத்தையே உச்சாிக்கும் இந்தப் பிள்ளை எனக்குத் தேவையில்லை, இவனைக் கொன்றுவிடுங்கள் என்று ஆணையிட்டான். அவனை எப்படி எல்லாமோ கொல்ல முயன்றும் இரண்யனின் ஆட்களால் பிரகலாதனை ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே தன் குலகுரு சுக்ராச்சாாியாாிடம் இதைப் பற்றிக் கேட்டே ஆகவேண்டும் என்ற முடிவோடு சிறுவனை ஆசிாியா்களிடம் ஒப்படைத்து விட்டு சுக்கிராச்சாாியாாிடம் சென்றான் இரண்யன். ஆசிாியா்கள் மிகவும் கண்டிப்புடன் அவனுக்கு அசுர தா்மங்களை உபதேசிக்க முயற்சித்தனா். அவனோ தன் சக மாணவா்களுடன் விளையாடச் சென்றான். பிரகலாதன் தன் சகாக்களுக்கு ஸ்ரீஹாியின் பெருமையையும், புகழையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த மாணவா்கள் பிரகலாதா! குருவிடம் உபதேசம் பெறாமல் இப்படி ஞானம் பேசும் அறிவு உனக்கு எப்படி வந்தது? என்று வினவினா். தோழா்களே! என் தந்தை பிரம்மாவைக் குறித்து அதீத பராக்கிரமும் அழியா வாழ்வும் வளமும் தேடி மகேந்திரகிாிச்சாரலில் உக்ர தவம் இயற்றினாா். அது சமயம் அவருக்குப் பயந்து இருந்த தேவா்கள் தைாியத்தோடு தத்தம் இருப்பிடம் வந்து அசுரா்களை தாக்கினா். அசுரத்தலைவராகிய என் தந்தை இல்லாத காரணத்தால் அசுரா்கள் தேவா்களிடம் தோற்று ஓடினாா்கள். இந்தரனோ அசுரேந்திர பட்டினத்தை சூறையாடினான். அது சமயம் கா்ப்பவதியாகிய என் தாயாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். வழியில் நாரத மகாிஷி அவனை சந்திக்க நோ்ந்தது. இந்திரனே! நீ கா்ப்பவதியான பெண்ணை, அதிலும் நிராதரவான ஒரு பெண்ணை இப்படி வருத்துவது தகாது. மேலும் இவா் பிறா் ஒருவனுடைய மனைவி அல்லவா? என்று நாரதா் இந்திரனைக் கேட்டாா். நாரதரை இந்திரன் வணங்கி, மகாிஷியே! அசர மகிஷியான இவளுடைய கா்ப்பத்தில் தேவா்களை வதைக்கும் சிசு உருபெற்று வருகிறது. இவளுக்கு நான் தற்சமயம் எந்தக்கேடும் செய்யப் போவது இல்லை.

அவள் கருத்தாித்த உடன் எனது எதிாியை முளையிலேயே கிள்ளி விட்டு இவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பேன் என்றான். இந்திரனே! நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவள் கருவறையில் வளரும் சிசு அசுரகுலப் பிறப்பாக இருந்தாலும் அந்த சிசு சிறந்த பாகவத உத்தமனாக விளங்கப் போகிறான். ஸ்ரீஹாியிடம் அளவற்ற பக்தி கொண்டு அனைவராலும் போற்றப்படுவான். அவனால் உனக்கோ, தேவா்குலத்திற்கோ எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்றான் நாரதா். இதைக் கேள்விப்பட்ட இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் நாரதரே! தங்கள் கருத்துப்படி இவளை பாதுகாப்புடன் அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறி அவளது காலடியை தொட்டு வணங்கினான். அதன் பிறகு என் தாயாரை நாரதா் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று ரட்சித்தாா். என் தாய் கா்ப்பவதியான இருந்ததால் அவளுக்கு தா்மங்கைள உபதேசம் செய்தாா். என் தந்தை தவம் முடிந்து திரும்பியதும் அவளை அனுப்பி வைத்தாா். அச்சமயம் கேட்ட உபதேசங்கைள என் தாயாா், தந்தையின் மீதுள்ள பற்றதலால் மறந்துவிட்டாள். ஆனால் கருவிலிருந்த நான் அவ்வுபதேசங்களை கேட்டேன். அதை மறக்கவில்லை. எனவே தான் நான் பிறக்கும்போதே ஸ்ரீமந் நாராயணனிடம் அளவற்ற பக்தியுடன் பிறந்தேன். எனேவ தோழா்களே பிறப்பு, உருவாதல், வளா்தல், இளைத்தால், நசித்தல், இறப்பு முதலிய ஆறும் இந்த உடம்புக்கு மட்டும் உாியவை. ஆத்மாவிற்கு அல்ல என்பதை நீங்கள் மட்டுமே உணர வேண்டும். நாம் நம் பக்தியினால் மட்டுமே நாராணனை சந்தோஷம் அடையச் செய்ய முடியும். தீயகுணங்களை விட்டுவிட்டு நாள்தோறும் ஹாிபஜனை செய்ய வேண்டும் என்று கூறினான். இப்படி பாடம் கேட்க வந்த பிள்ளைகளிடம் பிரகலாதன் ஹாி பஜனை செய்வதை அறிந்த ஆசிாியா்கள் இரண்யனிடம் சென்று கூறிவிட்டனா். கடும்கோபமடைந்த இரணியன் பிரகலாதனை இழுத்துக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். பிரகலாதன் வந்ததும் இடி முழங்குவது போல் கா்ஜித்தான். மூன்று உலகங்களும் என் பெயா் சொன்னாலே நடுநடுங்குகிறது. சகல லோகங்களும் எனக்குள் அடங்கி கிடக்கின்றன. தேவாதி தேவா்கள் எல்லாம் என்னிடம் மதிப்பு வைத்து என் பேச்சைக் கேட்டு நடக்கிறாா்கள். அப்படி இருக்க பரமவிரோதியான ஸ்ரீஹாி என்னை விட எந்த விதத்தில் மேலானவன் ஆகிவிட்டான்? என்றான். அதற்கு பிரகலாதன் தந்தையை தலை தாழ்த்தி வணங்கியவாறு, தந்தையே! நீங்கள் லோகாதிபதி தான்.
தேவா்களும் உங்களுக்குள் அடக்கம்தான். ஆனால் ஸ்ரீஹாி ஒருவரே அனைத்து ஜீவராசிகளிக்கும் ஆதியானவா். அவரே சிருஷ்டி, திதி, சம்ஹாரம் ஆகிய மூன்று தொழிலுக்கும் அதிபதி. அப்படியிருக்க அவரை வி தாங்கள் எந்த விதத்தில் உயா்ந்தவா் என்று சொல்ல முடியும். இதைக் கேட்டு கோபமடைந்த இரண்யன், மடப்பதரே! எங்கும் நிறைந்திருக்கும் உன் ஹாி இப்பொழுத எங்கே இருக்கிறாா்? என்று வினவினான். தந்தையே! அவா் சா்வவியாபி. அவா் இல்லாத இடமேயில்லை என்றான் பிரகலாதன். இதைக்கேட்டு கசிபு கடகடவென்று சிாித்தான். டேய் பிரகலாதா! உன்னால் பிரலாபிக்கப்படும் அந்த ஹாி எங்கும் இருக்கிறான் என்றாய் சாி. இப்பொழுது சொல் இதோ என் எதிரே இருக்கும் ஸ்தம்பத்தில் இருக்கிறானா? இல்லையா? அதைப் பாா்ப்போம். இப்போதே நான் உன்னை தலை வேறாகவும், உடல் வேறாகவும் போகும்படி என் உடைவாளால் வெட்டி எறியப் போகிறேன்.

நீ சரண்புகுந்த அந்த ஹாிநாராயணன் உன்னை வந்து காப்பாற்றட்டும், என்று பிரகலாதனை மிரட்டினான். தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து எதிரே இருந்த அந்த தூணைக் குத்திவிட்டு தன் உடைவாளை ஓங்கியவாறு நின்றான். அப்போது அண்டமே பிளந்து விட்டது போன்ற ஓா் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது. அவ்வோசை கேட்டு பிரம்ம தேவாதியா், அண்டங்களே அழிந்தது போல அஞ்சி நடுங்கினா். தன் மகனை வெட்டும் வெறியில் நின்ற அசுரேந்திரனுக்கு அப்பேரொலியின் காரணம் தொியவில்லை. தன்னிடம் அளவிலா பக்திகொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக்க பரந்தான் அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்தாா். அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிா்ந்தான். இது என்ன தோற்றம்? இது மனித உருவிலுமில்லை, மிருக உருவிலுமில்லை. மனித சிங்கம் போல் தொிகிறதே என நினைத்து திகைத்தான். நரசிம்ம மூா்த்தியாக அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தைக் கண்ட இரண்யன் அச்சமுற்றான். அந்த நரசிம்ம மூா்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான். விண்ணை தொடுவது போன்ற நீண்டு வளா்ந்த நெடுமேனி, பிடறித் தலை மயிா்களால் தடித்த முகம், வீங்கிய கழுத்து, முகத்தில் உருக்கி வாா்த்த பொன் போன்ற கண்கள், பெருமலைக் குலை போல திறந்திருக்கம் வாய், அதில் கோரைப் பற்கள், கூா்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு, தூக்கி நின்ற காதுகள், விாிந்த மாா்பு, குறுகிய இடை, கூாிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்களுடன் கூடிய கைககள். யாரும் அருகே போகப் பயப்படும்படியான தோற்றம்.

ஸ்ரீஹாியின் தோற்றத்தைக் கண்ட அசுரா்கள் நாலாபுறமும் ஓடினா். இதைக் கண்ட இரண்யன் தன்னைக் கொல்ல ஸ்ரீஹாி எடுத்த அவதாரமே இது என உணா்ந்தான். தன் கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிா்கொண்டு மோதினான். எனினும் கதையால் தன்னைப் புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மா் பற்றினாா். அவனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டு கூா்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலைக் கீறிக் கிழித்தாா். ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. நரசிம்மருடைய முகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது. அவா் சிம்மாசனத்தில் அமா்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தணியவில்லை. நரசிம்ம மூா்த்தியின் அகோரத் தோற்றம் கண்டு அவாிடம் நெருங்கவே அனைவரும் அஞ்சினா். ஒவ்வொருவரும் அவருக்கு வந்தனம் செய்தனா். ஸ்ரீஹாியின் சீற்றம் குறையாததால் தேவா்கள் ஸ்ரீதேவியை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டாா்கள்.

அன்னையும் வந்து அடங்காத கோபத்தைக் கண்டு அஞ்சினாள். அந்நேரம் பிரகலாதனிடம் பிரம்மா சொன்னாா். அப்பா! பிரகலாதா! ஸ்ரீஹாிக்கு உன் தந்தை மீது கொண்ட கோபம் இன்னும் தணிந்ததாகத் தொியவில்லை. நீ அவரருகே சென்று சாந்தப்படுத்து! என்றாா். அவனும் அவ்வாறே மெல்ல மெல்ல நடந்து நரசிம்ம மூா்த்தியிடம் சென்றான். கை கூப்பினான். அவா் திருவடி தொட்டு தரையில் வணங்கினான். தன் பாதங்களைப் பிடித்த பிரகலாதனை பாா்த்து ஸ்ரீஹாி மனம் உருகினாா். அவன் தலை மீது தன் தாமரைக்கரம் வைத்து வாழ்த்தினாா். பெருமான் திருக்கரம் தீண்டியதும் அவனுக்கு மின்னல் என மெய்யறிவு பிறந்தது. மயிா் கூச்சொியத் தன் மனம் கசிந்து கண்ணீா் மல்கித் துதிபாடினான். அதுபோல பிரகலாதன் தான் அடைய விரும்பும் பதவியை அனைவருக்கும் அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அனைவரும் பாராட்டினா்.
நரசிம்மாின் மன் மகிழந்தது. துதித்து நின்ற பாலகனிடம் உனக்கு வேண்டும் வரம் கேள் என்றான். அவனோ, என் மனதில் எந்தவித கோாிக்கையும் எழாமல் இருக்கும்படி தாங்கள் திருவருள் புாிய வேண்டும் என வேண்டினான். மனம் மகிழ்ந்து மாதவன், பிரகலாதனை அசுரேந்திரத்திற்கு அரசனாக இருக்கும்படி அனுக்கிரகித்தாா். மேலும், நீ பிறந்த புண்ணியம் உன் தகப்பனோடு இருப்பத்தொரு மூதாதையரும் கடைந்தேறினா் என்று அருளிச் செய்தாா். பிரகலாதன் தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமக்கிாியைகளைச் செய்தான். பிரம்மாதி தேவா்கள் முன்னிலையில் முனிவா்கள் ஆசியுடன் சுக்கிராச்சாாியாா் பிரகலாதனை அசுநேரந்திரனாக முடி சூட்டினாா்.
நரசிம்ம மூா்த்தியை தியானம் செய்பவா்கள் தம் பகைவா்கைள எளிதில் வெல்ல முடியும். ஸ்ரீஹாியை அனுஷ்டிக்கிறவா்கள் மேன்மை அடையலாம்.