12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்

திருப்பெருமங்கலம் வேளாளர் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் மாறாத அன்பும் அடிவர்கள்பால் அளவற்ற பக்தியும் கொண்டிருந்தார். சிவனை முழுமுதற் பொருளாக நினைத்திருந்தார். அவ்வாறு தான் வழிபடும் சிவனை நம்பிஆரூரர் தன் மனைவி பொருட்டு தூது விடுவதை அறிந்து கோபப்பட்டார். அதிசயப்பட்டார். எரிச்சலுற்றார். இவரெல்லாம் ஓர் தொண்டரா? என்னால் இதைக் காதால் கேட்கவும் முடியவில்லை. அந்த ஆரூரர் என் முன்னால் வந்தால் என்ன நடக்கும் என எனக்கே தெரியாது என கோபம் கொண்டார்.

இறைவன் ஆரூரர்மேல் அன்பு கொண்டவர். அவர்மேல் தனக்குள்ள நட்பை கலிக்காமருக்குப் புரியவைக்க முடியவில்லை. நண்பனா, தொண்டனா, இருவரும் வேண்டும், எனவே இறைவன் தன் நாடகத்தை நடத்த தொடங்கினார். கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக் கொடுத்தார். சொல்லவொன்னா துன்பத்துக்கு ஆளாகி துடிதுடித்தார். அப்போது பெருமான் தோன்றி உன்னை வருத்தும் சூலையை ஆரூரர் வந்து தீர்க்காவிடில் உம் சூலை தீராது என்றார். அதைக் கேட்ட கலிக்காமர் கொதித்தார். ஆரூரர் வந்து அந்த நோய் தீரும் என்றால் அந்த நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவன் ஆரூரர்பால் சென்று கலிக்காமர் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாய் என்றார். இறைவன் ஆணையை ஏற்று தான் வருவதை சொல்லி அனுப்ப, ஆரூரர் என் சூலையை தீர்க்க வருவதற்குள் நான்மாய்வேன். வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் எனக்கூறி குத்த உயிர் பிரிந்தது.

ஆரூரர் வந்தார். கலிக்காமரின் மனைவி அடியவரான அரூராாிடம் தம் உணர்சிகளைக் காட்டாமல் எதிர் கொண்டு அழைத்தார். தான் கலிக்கமருடைய நோயை தீர்க்க வந்துள்ளேன் என்றார், அவர்மனைவி அவருக்கு எந்த துன்பமுமில்லை. அவர் உறங்குகின்றார் கூறினாள். எப்படியாவது நான் அவரைப் பார்க்கவேண்டும் என வற்புறுத்த இரத்த வெள்ளத்தில் கிடந்த கலிக்காமரை காண்பித்தாள் கலிக்காமா் மனைவி. தன்பால் கொண்ட கோபத்தினால் இந்த முடிவு என்றால் அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்வேன் என உடைவாளை எடுத்து குத்திக்கொள்ள போனார். இறைவன் அருளினாலே கலிக்காமர் விழிப்புற்று நம்பி ஆரூரர் கரத்தைப்பற்றி நண்பனாக இருந்து நான் கெட்டேன் என வருந்தினார். நோய் நீங்கி இருவரும் திருபுன்கூரில் வழிபட்டு சிலநாள் அங்கிருந்தனர். ஆரூரர் திருவாரூர் சென்றார். ஏயர்கோன் கலிக்காமர் இறைபணிதொடர்ந்து சிவனடி சேர்ந்தார்.

இறைவன்: வன்றொண்டீஸ்வரர்

இறைவி : அபிராமியம்மை

குலம் : வேளாளர்

அவதாரத் தலம் : திருப்பெருமங்கலம்

முக்தி தலம் : திருப்பெருமங்கலம்

செய்த தொண்டு : சிவ வழிபாடு

குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆனி – ரேவதி

முகவரி : அருள்மிகு. வன்றொண்டீஸ்வரர் திருக்கோயில், திருப்பெருமங்கலம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்
(நாகப்பட்டினம் மாவட்டம்).

சிறப்பு: இத்தலம் ஏயர்கோன் கலிக்காம நாயனார் அவதரித்த தலமாகக் கருதப்படுகிறது.
“வன்றொண்டர்” என்பது சுந்தரமூர்த்தி நாயனாரைக் குறிக்கும். நாயன்மார்களில் ஒருவரான ஏயர்கோன் கலிக்காம நாயனார், சிவபெருமானின் தொண்டர்களான
“வன்றொண்டர்களுக்கு” (சுந்தரருக்கு) தொண்டு செய்தவர். அதனால் இப்பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

குறிப்பு: பெரும்பாலானோர் “விருந்தீஸ்வரர்” (வடமதுரை, கோவை) கோயிலுடன் குழப்பிக் கொள்கின்றனர்.
வன்றொண்டீஸ்வரர் (திருப்பெருமங்கலம்) வேறு, விருந்தீஸ்வரர் (வடமதுரை) வேறு.